வழிப்பறி செய்து வரும் ரவுடி கும்பல்-அச்சத்தில் சுற்றுலா பயணிகள்
1043 views
Subscribe திருநெல்வேலி videosதென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் சீசன் காலகட்டங்களில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து அருவிகளில் ஆனந்த குளியல் இடுவது வழக்கம்.அந்த வகையில், இன்னும் ஒரு சில தினங்களில் சீசன் தொடங்க உள்ள சூழலில், அதற்கான முன்னேற்பாடுகளாக அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் தற்காலிக கடைகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சிலர் முன்னதாக அமைக்கப்பட்ட கடைகளில் வணிகம் செய்து வரும் சூழலில், இரவு நேரங்களில் சில மர்மகும்பல் வியாபாரிகள், வியாபாரம் செய்து வரும் இடங்களுக்குள் புகுந்து அவர்களை மிரட்டி பணம், பொருட்கள் உள்ளிட்டவர்களை பறித்து, பணம் தர மறுக்கும் வியாபாரிகளை தாக்கி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன.இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவி பகுதியில் கடைகள் உள்ள பகுதிக்கு சென்ற இளைஞர்கள் இருவர், அந்த பகுதியில் வணிகம் செய்து வந்த ஒரு வியாபாரியின் தலையில் கடுமையாக தாக்கி பணம், பொருட்கள் உள்ளிட்டவர்களை வியாபாரியிடம் இருந்து பறித்துள்ளனர்.இந்த நிலையில், அந்த வியாபாரி குற்றாலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சில வாலிபர்கள் கஞ்சா, மது உள்ளிட்ட போதைகளில் அந்த பகுதியில் உலா வந்ததும் வியாபாரிகளை மிரட்டி அவர்கள் பணம் பொருள்கள் உள்ளிட்டவைகளை பறித்து சென்றதும் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான குற்றாலம் பகுதியில் ரவுடிகள் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.