நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் கடைகளை அடைக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்!
1039 views
Subscribe திருநெல்வேலி videosதமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் போலி மதுபான கடைகளையும் அடைத்து கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் தென்மண்டல தலைவர் கார்த்திசன் மாநில துணைத்தலைவர் உடையார் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து அவர்கள் கைகளில் பாட்டில்களில் வைத்திருந்த கள் குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் கலந்துகொண்ட பெண்களும் கள் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது அப்போது அங்கு இருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர் ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது போராட்டக்காரர்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்தி கள் விற்பனைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.