வரவு செலவு கணக்கு கேட்டால் சாதி பிரச்சனையை ஏற்படுத்துவேன் ஊராட்சி தலைவர் மிரட்டல்!
1042 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செழியநல்லூர் ஊராட்சி தலைவியாக சுப்புலட்சுமி என்பவர் இருந்து வருகிறார் இவரது கணவர் செல்லத்துரை. வழக்கம்போல் பெண் தலைவர் என்பதால் பெரும்பாலும் ஊராட்சி தலைவியின் கணவர் செல்லத்துரை தான் பஞ்சாயத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது மேலும் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று மே தினத்தை முன்னிட்டு செழியநல்லூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவி சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது அப்போது ஊர் பொதுமக்கள் ஊராட்சியின் வரவு செலவு குறித்து கணக்கு கேட்டுள்ளனர் அதற்கு கணக்கு காட்ட முடியாது என ஊராட்சித் தலைவியும் அவரது கணவர் செல்லத்துரையும் பொது மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது கடந்தாண்டு 35 லட்சம் ரூபாய் நிதி செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது அந்த நிதியில் என்னென்ன வேலைகள் பார்க்கப்பட்டது என்ற விவரத்தை வழங்குமாறு ஊர் மக்கள் கேட்டனர் ஆனால் மக்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் ஊராட்சித் தலைவர் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர் இது குறித்து செழியநல்லூர் ஊராட்சிநை சேர்ந்த மணிகண்டன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் எங்கள் ஊராட்சியில் எந்த பணிகளும் முறையாக நடைபெறுவதில்லை இதுகுறித்து தலைவரிடம் கணக்கு கேட்டால் தர மறுக்கிறார் மேலும் சாதி ரீதியாக பிரச்சனையை ஏற்படுத்திவேன் என்று ஊராட்சி தலைவியின் கணவர் பகிரங்கமாக மிரட்டுகிறார் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசு அலுவலர்கள் யாரும் பங்கேற்கவில்லை ஊராட்சி கிளர்க் சண்முக சதீஷ் கேள்வி கேட்கும் இளைஞர்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறார் எனவே ஊராட்சி தலைவர் மற்றும் கிளர்க் மீது நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் எங்கள் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர் இதற்கிடையில் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் வரவு செலவு குறித்து பொதுமக்கள் கணக்கு கேட்கும் பொது ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது