சொத்தையும் அபகரித்துக் கொண்டு கொடுமைப்படுத்துவதாக கூறி 2 மகன்கள் மீது புகார் அளித்த தந்தை!
1053 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பையா 80 வயதாகும் இவருக்கு ஒரு மனைவியும் வங்கி பணியாளரான கண்ணன் என்ற மகனும் அய்யப்பன் என்ற மகனும் சேர்த்து இரண்டு மகன்கள் உள்ளனர்.இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் இவரது மகன்களும் சொத்தை பிரித்து கொடுத்ததுடன் ₹1 லட்சம் பணத்தையும் பெற்றுகொண்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் வீட்டில் இருந்த சுப்பையாவை நேற்றைய தினம் இரு மகன்களும் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் அதில் கை உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தோள்பட்டை போன்றவைகளில் ஊமைகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் சுப்பையாவை அவரது மகன்கள் அடிக்கவந்த போது பக்கத்து வீட்டுகாரர்கள் தடுத்ததற்கு அவர்களையும் அபாச வார்த்தைகளால் திட்டியுள்ளதாகவும் கூறி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி சுப்பையா மனு அளித்துள்ளார்.மேலும் இருமகன்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுப்பதுடன் தான் சுயமாக சம்பாதித்த பணத்தையும் மீட்டு தரவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பெத்த மகன்கள் இருவர் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் தன்னை காப்பாற்ற கோரி தந்தை ஒருவர் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.