கண் மருத்துவமனையை மொரிசியஸ் நாட்டின் குடியரசு தலைவர் பிரித்திவிராஜ் சிங் ரூபன் திறந்து வைத்தார்!
1076 views
Subscribe திருநெல்வேலி videosதிருநெல்வேலியில் அமைந்துள்ள அகர்வால் கண் மருத்துவமனையை மொரிசியஸ் நாட்டின் குடியரசு தலைவர் பிரித்திவிராஜ் ரூபன் இன்று திறந்து வைத்தார் . இந்தியாவில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் கண் பார்வையற்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் .இவைகளை அகற்றுவதே எங்களின் நோக்கம் என அகர்வால் மருத்துவமனையின் தலைவர் அமர் அகர்வால் தெரிவித்தார் .மேலும் தற்பொழுது கண் நரம்பியல் நோய்களில் மனித உடலில் உள்ள ரத்த நாளங்களில் இருந்து எடுக்கப்படும் பசை மூலம் லென்ஸ்கள் மருத்துவத்துறையில் முன்னேறிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது என்றும் அதே தொழில்நுட்பத்தை தான் அகர்வால் கண் மருத்துவ மருத்துவமனைகளிலும் செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.திருநெல்வேலியில் இன்று அகர்வால் கண் மருத்துவமனையை மொரிசியஸ் நாட்டின் குடியரசு தலைவர் பிரித்திவிராஜ் சிங் ரூபன் திறந்து வைத்தார்.65,000 சதுர அடி கட்டிட பரப்பளவோடு இம்மருத்துவமனை 20 கண் மருத்துவர்களோடு செயல்பட உள்ளது . மொத்தம் 138 மருத்துவமனைகளைக் கொண்ட அகர்வால் கண் மருத்துவமனை குழுமத்தில் 114 மருத்துவமனைகள் இந்தியாவில் உள்ளன .மற்றவைகள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகின்றன.செய்தியாளர்களை சந்தித்த அகர்வால் மருத்துவமனை குழுவின் தலைவர் அமர் அகர்வால் இந்தியாவில் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் கண் பார்வையற்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் .இதற்கு முக்கிய காரணம் இந்தியா மக்களின் உணவு பழக்க வழக்கமும் இயற்கையாகவே இந்தியாவில் உள்ள அதிகபட்ச வெப்பநிலையின் மூலம் அல்ட்ரா வயலட் எனப்படும் ஒளிக்கதிர் வீச்சால் பல்வேறு கண் சம்பந்தமான குருட்டு நோய்கள் ஏற்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார் . இந்தியாவில் உள்ள கண் பார்வையற்ற நோய் தாக்கத்தைஅகற்றுவதும் அகர்வால் கண் மருத்துவமனையின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.முன்னேறிய வெளி நாடுகளில் கண் லென்ஸ்களில் ஒட்டப்படும் பசை போன்ற திரவத்தில் தற்போது பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துள்ளன இதில் அதிநவீன மனிதனின் ரத்த நாளங்களில் இருந்து தயாரிக்கப்படும் பசைகள் மூலமே நாங்கள் அறுவை சிகிச்சையின் போது ஒட்டுவதற்கு பயன்படுத்துகிறோம் என்றார்.விழாவில் மொரிசியஸ் நாட்டின் முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.