கம்பம் நகர மக்களை கதி கலங்க வைத்த அரிக்கொம்பன் காட்டு யானை வனப்பகுதியில் விடுவதற்காக அழைத்து வரப்படுகிறது!
தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் கடந்த 27ஆம் தேதி அரிக்கொம்பன் என்ற காட்டு யானை ஊருக்குள் புகுந்தது தொடர்ந்து நகர் பகுதியில் வலம் வந்த அந்த யானை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. பால்ராஜ் என்பவரை அரிக்கொம்பன் யானை தாக்கி அவர் உயிரிழந்தார் இதனால் மக்கள் பீதி அடைந்த நிலையில் வனத்துறையினர் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த நிலையில் பிடிப்பட்ட அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் பலத்த பாதுகாப்போடு நெல்லை அழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மாஞ்சோலை அடுத்த கோதையாறு அணை அருகே முத்துக்குழி பகுதியில் விடுவதற்காக அழைத்து வருகின்றனர் அங்கே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்குள் யானை விடப்பட்டதாக கூறப்படுகிறது இதற்கிடையில் மிகவும் அச்சுறுத்தலாக உள்ள அரிக்கொம்பன் யானையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிமுத்தாறு பகுதி மக்கள் மணிமுத்தாறு வன சோதனை சாவடி அருகே போராட்டத்தில் ஈடுபடலாம் என்று தகவல் வெளியானது எனவே துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மணிமுத்தாறு சோதனை சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் யானை கொண்டு செல்ல போவதாக கூறப்படும் மணிமுத்தாறு சாலையில் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. காட்டுப்பகுதிக்குள் அணையை கொண்டு செல்லும்போது வழிப்பதையை சீரமைப்பதற்காகவும் மயங்கிய நிலையில் உள்ள யானையை வாகனத்தில் இருந்து கீழே இறக்குவதற்கும் ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது