கூடங்குழி மீனவ கிராமத்தில் மண்ணில் நாட்டு வெடிகுண்டு புதைக்கப்பட்டதா என சோதனை
1029 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லை மாவட்டம் கூத்தங்குழி மீனவ கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு மண்ணில் புதைக்க வைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி சோதனை .நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்த கூத்தங்குழி மீனவ கிராமத்தில் பாத்திமா நகர் ,சுண்டங்காடு ஆகியப் பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனவா , ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்பது பற்றி கூடன்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சுமார் மூன்று மணி நேரம் சோதனை நடத்தினர் சோதனையில் நாட்டு வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் மீண்டும் சோதனை நடத்தப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ளது கூத்தங்குழி கடற்கரை கிராமம். இங்குள்ள அனைவரும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர் . பல ஆண்டுகளாக ஊர் பிரச்சனை காரணமாக இரண்டு பிரிவினராகவே இங்குள்ள மீனவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன்பு ஆரல்வாய்மொழி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் இந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்குள்ளேயே தகராறு ஏற்பட்டுள்ளது.. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வருகிறது.இந்த சூழ்நிலையில் கூத்தங்குழி மீனவ கிராமத்தில் கடந்த 19ஆம் தேதி புனித கித்தேரி அம்மான் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.திருவிழாவை ஒட்டி இருப்பினவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்படும் என்ற நிலையில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கம்பு, அரிவால் போன்ற ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதனை அடுத்து இன்று காலை கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கூத்தங்குழி அருகே உள்ள பாத்திமா நகர், சுண்டங்காடு ஆகிய தோட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் எந்த விதமான நாட்டு வெடிகுண்டுகளோ ஆயுதங்களோ கைப்பற்றப்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.என்றாலும் மீண்டும் சோதனை நடத்தப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்