சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது!
1045 views
Subscribe திருநெல்வேலி videosதமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக்கான வருஷாபிஷேக விழா இன்றைய தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து சுவாமி சன்னதி மற்றும் அம்பாள் சன்னதியில் தனி தனியாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகளும் மகாதீப ஆராதனையும் நடந்தது தொடர்ந்து யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட மகா கும்பம் ஊர்வலம் எடுத்துவரப்பட்டு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் மூல விமானங்களுக்கு தனித்தனியாக மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து மாலையில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருள பஞ்சமூர்த்தி களுடன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.