திருநெல்வேலி வழியாக ஐஆர்சிடிசி சார்பில் கொச்சுவேலியில் இருந்து டெல்லி வரை பிரத்யேக சுற்றுலா ரயில் இயக்கம்!
1091 views
Subscribe திருநெல்வேலி videosஇந்தியன் ரயில்வேயின் ஒரு அங்கமான ஐஆர்சிடிசி சுற்றுலா பயணிகளுக்காக பிரத்யேக சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது அந்த வகையில் சமீபத்தில் பாரத் கெளரவ் சிறப்பு சுற்றுலா ரயில் மண்டல ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டது அதன் தொடர்ச்சியாக ஐஆர்சிடிசி தெற்கு மண்டலம் சார்பில் கேரள மாநிலம் கொச்சிவேலியில் இருந்து டெல்லி வரை வைஷ்ணவ தேவி யாத்திரை என்ற பெயரில் பாரத் கெளரவ் சிறப்பு சுற்றுலா ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை பன்னிரண்டாம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் 12 இரவுகள் இந்த ரயிலில் பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஐ ஆர் சி டி சி தென்மண்டல பொது மேலாளர் ரவிக்குமார் திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த சிறப்பு ரயில் கொச்சி வேலியில் இருந்து நாகர்கோவில் திருநெல்வேலி விருதுநகர் திருச்சி தஞ்சாவூர் சிதம்பரம் விழுப்புரம் செங்கல்பட்டு தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் வழியாக இந்த ரயில் ஹைதராபாத் செல்லும் ஹைதராபாத்தில் சார்மினார் ராமானுஜர் சிலை ஆகிய இடங்களை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து ரயில் ஆக்ரா சென்றடைகிறது ஆக்ராவில் தாஜ்மஹாலை சுற்றி பார்க்கலாம் தொடர்ந்து ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோயில் அமிர்தசரஸ் வாகா எல்லை பொற்கோயில் டெல்லியில் குதுப்பினார் இந்தியா கேட் செங்கோட்டை இந்திரா அருங்காட்சியகம் லோட்டஸ் கோயில் போன்ற இடங்களை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த ரயிலில் மூன்று குளிர்சாதன பெட்டிகள் எட்டு சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஒரு பேன்ட்ரி கார் இரண்டு பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன இந்த ரயிலில் பயணிக்க ஒரு நபருக்கு சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டியில் நபர் ஒருவருக்கு ரூ.22,350ம் ஏசி பெட்டியில் ரூ.40380ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்து. சிறுவர்களுக்கு சாதாரண படுக்கக வசதி கொண்ட பெட்டியில் ஒரு நபருக்கு ரூ.21,010ம் ஏசி பெட்டியில் நபர் ஒருவரிக்கு ரூ.38490ம் கட்டணம் வசூலிக்கப்படும். பொதுமக்கள் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவும் சென்னை மதுரை போன்ற ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கவுண்டர்களிலும் இதற்கான டிக்கெட் முன் பதிவு செய்யலாம் முக்கிய அம்சமாக சுற்றுலா செல்லும் இடங்களில் ஏசி மற்றும் ஏசி இல்லாத தங்கும் இடம் சுற்றுலா இடங்களை பார்வையிடுவதற்கான போக்குவரத்து வசதி (ஏசி/ஏசி அல்லாத) ரயிரில் உணவு வசதி மற்றும் பாதுகாவலர்கள் வசதி போன்றவை ரயில் கட்டணத்திற்குள் செய்து கொடுக்கப்படும். இதற்கான தனி கட்டணம் செலுத்த தேவையில்லை. அதிகளவு எண்ணிக்கையில் ஒரே குடும்பதாக வந்தால் சலுகைகள் எதுவும் வழங்கப்படாது இதுவரை 60% முன்பதிவு முடிந்து விட்டது திருநெல்வேலி வழியாக இயக்கப்படும் முதல் சுற்றுலா ரயில் இது தான் என்று தெரிவித்தார்.