தி கேரளா ஸ்டோரி திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்
1067 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லை மாநகர பகுதியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் ராஜேந்திரனிடம் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் இந்து முன்னணியினர் மனு ஒன்றை அளித்தனர்.அதில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தி கேரளா ஸ்டோரி என்றும் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாகவும் இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி உள்ளது தமிழகத்தில் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிடுவதற்கு காவல்துறை வாய்மொழியாக தடை விதித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது அதன் காரணமாக நெல்லை மாநகர பகுதியில் எந்த திரையரங்குகளும் இந்த படம் வெளியாகவில்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது எனவே திரைப்படத்தை திரையிடுவதற்கு காவல் துறையால் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வாய்மொழி தடை உத்தரவை திரும்ப பெற்று திரையரங்கத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது