பள்ளி வாகனம் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து
1040 views
Subscribe திருநெல்வேலி videosதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் திருச்செந்தூர் கோவில் சென்று விட்டு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது சங்கரன்கோவில் அருகே உள்ள பணவடலிசத்திரம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது தனியார் பள்ளி வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குருசாமி (45) குருசாமியின் மனைவி வேலுத்தாய் (35) மாமியார் உடையம்மாள் (60) குருசாமி மகன் மனோஜ் குமார் (22) உள்ளிட்ட காரில் 5பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் இந்த விபத்தானது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் கீழே விழுந்த நிலையில் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக பள்ளி வாகனம் திரும்பிய நிலையில் எதிரே வந்த காரில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.