கோடை வெயிலிக்கு இடையே இடி மின்னலுடன் கொட்டிய மழை!
1138 views
Subscribe திருநெல்வேலி videosதமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது சில நாட்களாக மழை பெய்து வருகிறது திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அனல் தாங்க முடியாமல் மக்கள் அவதி அடைந்து நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வபோது கோடை மழையும் பெய்து வருகிறது குறிப்பாக திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது இதற்கிடையில் இந்திய வானிலை மையம். தமிழகத்தின் நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது அதன்படி திருநெல்வேலி மாநகரில் இன்று காலை வழக்கம்போல் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் பிற்பகல் 1 மணியளவில் மாநகரின் பல்வேறு பகுதியில் திடீரென கருமங்கள் சூழ்ந்து இடியுடன் மழை பெய்ய தொடங்கியது குறிப்பாக பாளையங்கோட்டை நெல்லை சந்திப்பு கொக்கிரகுளம் சமாதானபுரம் தச்சநல்லூர் மேலப்பாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியது சுமார் 45 நமிடம் வரை மழை நீடித்து வருகிறது பலத்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் மின்விளக்குகளை ஒளிரச் செய்தபடி சென்றனர் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.