குளம் போல் காட்சியளிக்கும் பாபநாசம் அணை:தெற் மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்திருப்பு !
1035 views
Subscribe திருநெல்வேலி videosதிருநெல்வேலி மாவட்டம் பெரும்பாலும் விவசாயத்தை நம்பிய மாவட்டமாகவே உள்ளது இங்கு பாபநாசம் மணிமுத்தாறு சேர்வலாளறு உள்ளிட்ட ஆறு அணைகள் உள்ளது. கடந்த அக்டோபர் நவம்பர் மாதங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் தெரியவில்லை இதன் காரணமாக அணைகளில் நீர் இருப்பு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.143 அடி உயரமும் 5500 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டு பாபநாசம் அணையில் 29 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது ஒரு டிஎம்சிக்கு குறைவான தண்ணீரே அணையில் உள்ளது. கடல் போல காட்சியளிக்கும் பாபநாசம் அணை தண்ணீர் குறைவாக உள்ளதால் குளம் போல காட்சி அளிக்கிறது மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு 63 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது எனினும் 1.5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே அந்த அணையில் இருக்கும் உள்ளது 4 மாவட்ட குடிநீர் சேவையை பூர்த்தி செய்வதால் அந்த அணையில் இருந்தே தற்போது தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது இந்த நிலையில் பாபநாசம் அணை யில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கார் சாகுபடிக்காக ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் இதன் மூலம் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 86,000 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி வரும் மறைமுகமாக ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறும் ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால். அணை இன்று திறக்கப்படவில்லை. அடுத்த 10 - 15 நாட்களில் திறக்கவும் வாய்ப்பில்லை என கூறப்படுகிறது . கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கி தீவீரமடையும் நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மழைப் பொழிவை பெறும் அதனை தொடாந்து குற்றால சீசன் துவங்கும். நெல்லை மாவட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். குறைந்த பட்சம் பாபநாசம் அணையில் 60 அடிக்கு மேல் தண்ணீர் மட்டம் உயர்ந்தால் மட்டுமே கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும் என பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது வரை தென்மேற்கு பருவ மழை துவங்காத நிலையில் இந்த ஆண்டு கார் சாகுபடி கை கூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது