அதிகாரிகள்'சீல்'இறந்த பிறகு அவரது பெயரில் கடைகள் நடத்திய தொடர்பாக சர்ச்சை!
Subscribe திருநெல்வேலி videos
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கொக்கிள்ர குளத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்திற்குள் 11.கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இரண்டு ஹோட்டல் உள்ளிட்ட 7 கடைகள் இன்று காலை பொதுப்பணித்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. இந்த கடைகளை நடத்தி வந்தவர்கள் இறந்து உள்ளனர். மேலும் இந்த கடைகள் இறந்தவர்கள் பெயரில் செயல்பட்டு வருவதாகவும், அதற்கான வாடகைகளை கடை நடத்தி வந்தவர்கள் வழங்கியது தொடர்பாக புகார் கொடுத்ததின் பேரில் இன்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.