பட்டமளிப்பு விழாவிற்கு காத்திருக்கும் நெல்லை பல்கலைக்கழக மாணவர்கள்!
1030 views
Subscribe திருநெல்வேலி videosதிருநெல்வேலி மாவட்டத்தில் 1990 ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இங்கு பல்வேறு பட்டப்படிப்புகளை நேரடியாகவும், பல்கலைக்கழகத்துறைகள் மூலமாகவும், கல்லூரிகள் மற்றும் தொலைநெறிக்கல்வி இயக்ககம் மூலமாகவும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் உயர் கல்வி முடித்தவர்களுக்கும் ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு ஆளுநர் கையால் வழங்கப்படும்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி என நான்கு மாவட்டங்களில் 110 க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. இந்தப் பல்கலைக்கழகத்தில் 28 மற்றும் 29 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ம் தேதி ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆளுநர் மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.ஆனால் அதன் பிறகு கடந்த 2022 ல் ஆராய்ச்சி படிப்பு மற்றும் உயர் கல்வி முடித்தவர்களுக்கு தற்போது வரை பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. இதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முடித்த 24, 300 மாணவர்களும், முதுகலை படிப்பில் தகுதி பெற்ற 5,500 மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பில் 30 துறைகளில் தகுதி பெற்ற முனைவர்கள் மட்டும் 1000 பேர் வரை காத்திருக்கிறார்கள்.பட்டம் பெற காத்திருக்கும் மாணவர்களின் தரப்பில் இதுவரை பட்டமளிப்பு விழாநடைபெறாதது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் அவர்களிடம் கேட்டபோது...தமிழக ஆளுநருக்கு கடந்த அக்டோபர் மாதம் பட்டமளிப்பு விழா நடத்த தேதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம். இந்த ஜூன் மாத இறுதியில் ஆளுநர் கலந்துகொண்டு விழா நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. தேதி உறுதியான பிறகு அறிவிக்கப்படும் என துணைவேந்தர் சந்திரசேகர் தகவல் தெரிவித்துள்ளார்..மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறாத குறித்து செய்தி ஒளிபரப்பான நிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை மாதம் பட்டமளிப்பு விழா ஆளுநர் தலைமையில் நடைபெறும் என தகவல் தெரிவித்துள்ளனர்