நெல்லை கைலாசநாத சுவாமி திருக்கோவில் வைகாசி திருவிழா!
1063 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றான நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் அமைந்திருக்கும் சௌந்தரவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகாசி திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் இந்த அதிகாலை கோவிலில் நடைபெற்றது இந்த விழாவுக்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து சுவாமி கைலாசநாதர் சௌந்தரவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் செப்பு கேடையத்தில் எழுந்தருளி மகா தீபாராதனை நடந்தது தொடர்ந்து கொடி பட்டத்துடன் சுவாமி அம்பாள் திருவீதி உலாவும் பின்னர் கொடிமரத்திற்கு பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது தொடர்ந்து பால் தயிர் மஞ்சள் இளநீர் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் மகாதிபாராதனையும் நடந்தது இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 28ஆம் தேதியும் தீர்த்தவாரி 29ஆம் தேதியும் நடைபெறுகிறது .கொடியேற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.