தமிழகத்திற்குள் இயக்கப்படும் ரயில்களில் அதிக வருவாய் தரும் ரயிலாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மாறி உள்ளது!
1106 views
Subscribe திருநெல்வேலி videosதென்னக ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் வருவாய் மற்றும் பயணிகள் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் 50 இடங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. முதலிடத்தை எர்ணாகுளத்தில் இருந்து (டில்லி) நிசாமுதீன் செல்லும் மங்கள் தீப் எக்ஸ்பிரஸ் பிடித்துள்ளது. ஜனவரி 1ந்தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலான 4 மாத காலத்தில் மங்கள் தீப் எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 342 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.அதற்கான வருவாயாக 36 கோடியே 32 லட்சத்து 54 ஆயிரத்து 585 கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் 28 வது இடத்தையும் சென்னையிலிருந்து மறுமார்க்கமாக புறப்படும் நெல்லை வரும் அதே நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் 29 வது இடத்தையும் என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. இரு மார்க்கங்களிலும் சேர்த்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு மாத காலங்களில் மட்டும் 3 லட்சத்து 32 ஆயிரத்து 884 பேர் பயணம் செய்துள்ள நிலையில் அதற்கான வருவாயாக 23 கோடியே 35 லட்சத்து 33 ஆயிரத்து 997 ரூபாய் கிடைத்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து தமிழகத்திற்குள் இயக்கப்படும் ரயில்களில் வருவாய் முதல் இடத்தை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 30-வது இடத்தை பிடித்துள்ளதுடன் அந்த ரயிலில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 564 பேர் பயணம் செய்துள்ள நிலையில் அந்த ரயிலின் வருவாயாக 11 கோடியே 54 லட்சத்து 36 ஆயிரத்து 599 ரூபாய் கிடைத்துள்ளது அதேபோல் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 32 வது இடத்தையும் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 33 வது இடத்தையும் பிடித்துள்ளது. செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 34 வது இடத்தையும் குருவாயூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 45வது இடத்தையும் பிடித்துள்ளது சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் 46 வது இடத்தையும் மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் 47வது இடத்தையும் அதே போல் மதுரையிலிருந்து சென்னைக்கு அதிவிரைவு சொகுசு ரயிலாக இயக்கப்படும் தேஜஸ் ரயில் 49வது இடத்தையும் பிடித்துள்ளது.ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாத காலத்தில் 40 ஆயிரத்து 595 பயணிகள் மட்டும் பயணம் செய்த சென்னை நிசாமுதீன் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 11 கோடியே 21 லட்சத்து 63 ஆயிரத்து 218 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது இந்த ரயிலில் தான் குறைந்த அளவிலான பயணிகள் பயணம் செய்த நிலையிலும் 10 கோடிக்கு மேலான வருவாய் கிடைத்துள்ளது