நாங்குநேரி கவுன்சிலர் மனு!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பேரூராட்சியில் 15 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த பேரூராட்சி தலைவியாக திமுகவைச் சேர்ந்த கல்யாணி என்பவர் வெற்றி பெற்று தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் பேரூராட்சி தலைவராக இருக்கும் கல்யாணி மற்றும் செயல் அலுவலராக இருக்கும் சாசன்மேத்யூ இருவரும் சேர்ந்து அரசு பணம் 1,55,571 ரூபாய் பணத்தை, பேரூராட்சி தலைவர் கல்யாணியின் தனி வங்கி கணக்கில் 19/12/22 அன்று காசோலை மூலம் செலுத்தி மோசடி செய்துள்ளனர். ஆனால் இந்த முறைகேடுகள் குறித்து உரிய ஆவணங்கள் அளிக்கப்பட்டும் பேரூராட்சி மண்டல இயக்குனர் அலுவலகத்தில் இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணை விசாரணை மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்ட பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஸ்டேஷன் மேத்யூ இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் நாங்குநேரி பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் இணைந்து மனு அளித்தனர்.நாங்குநேரி பேரூராட்சியில் ஊழல் செய்த பேரூராட்சி மன்ற தலைவர் கல்யாணி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு துணையாக இருந்த செயல் அலுவலர் சாசன் மேத்யூ இருவர் மீதும் நடைபெற்று வரும் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். மேலும் பேரூராட்சியில் டெங்கு பாதிப்பு அதிக எண்ணிக்கையில் உள்ளது இதற்கான களப்பணி செய்வதற்கு கடந்த 12 வருடங்களாக 10 நபர்கள் பணியில் இருந்தனர். ஆனால் இதில் பழைய நபர்கள் ஐந்து பேரை பேரூராட்சி சார்பில் நீக்கிவிட்டனர் எனவே சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி நீக்கப்பட்ட ஐந்து பேரையும் மீண்டும் பணியமர்த்தி தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம் எனக் கூறினார்.