எட்டு மணி நேர வேலை உரிமையை பாதுகாப்போம் இந்த முழக்கங்களோடு மே தின பேரணி!
1041 views
Subscribe திருநெல்வேலி videosமே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இந்தியாவின் மே தினத்தின் நூற்றாண்டு நிறைவையொட்டி சிஐடியு மற்றும் ஏ ஐ டி யு சி தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது இதன்படி நெல்லை பாளையங்கோட்டையில் இந்திய மாநில அரசுகள் தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தாதே 8 மணி நேர வேலை உரிமையை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது இந்த பேரணி சி ஐ டி யு மாநில துணைப் பொதுச் செயலாளர் திருச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இப்பேரணி பாளையங்கோட்டை எல்ஐசி அலுவலகம் முன்பு துவங்கி லூர்து நாதன் சிலை முன்பு முடிவடைந்தது. இப்பேரணியில் கலந்து கொண்ட திரளான தொழிலாளர்கள் ஜாதி சண்டை மத சண்டை வேண்டாமே மத்திய அரசு தனியார் மையமாகும் கொள்கையை கைவிட வேண்டும் எட்டு மணி நேர வேலை உரிமையை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர் மேலும் பேரணியின் முடிவில் லூர்து நாதன் சிலை அருகே பொது கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையிலும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் மேலும் ஜாதி மதம் கடந்து தொழிலாளர்கள் ஒற்றுமை வலியுறுத்தும் வகையில் இப்பேரணி நடைபெற்றது மேலும் அரசுகளின் தொழிலாளர் விரோத கொள்கைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என சபதம் ஏற்போம் என்று சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு செல்வம் தெரிவித்தார்