நெல்லை மாநகர பகுதிகளில் இன்று மீண்டும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது!
1029 views
Subscribe திருநெல்வேலி videosதமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியில் சுழற்சி நிலவுவதால் அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று நேற்று முன்தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி நெல்லை மாநகரில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் மாநகரின் பல்வேறு பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது இந்த நிலையில் இன்று மதியம் நெல்லை மாநகர பகுதிகளில் மீண்டும் மிதமான மழை பெய்ய தொடங்கியது தொடர்ந்து மாலை வரை வெயில் தாக்கம் இல்லாமல் இதமான வானிலை நிலவியது இந்த நிலையில் இரவு 8 மணிக்கு மேல் திடீரென மாநகர பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்தது பாளையங்கோட்டை டவுண் பெருமாள்புரம் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒன்றரை மணி நேரம் மழை பெய்த்து இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன அடுத்தடுத்த பெய்த இந்த மழையால் நெல்லை மாநகர பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்தியான வானிலை நிலவுகிறது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.