அம்பாசமுத்திரம் அருகே உள்ள பூங்கா அமைய இருக்கும் இடத்தில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு!
1023 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்திலுள்ள காக்காச்சி என்ற பகுதியில் ரூ.7 கோடி மதிப்பில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இந்த பூங்கா அமைய இருக்கும் நிலையில் பல்லுயிர் பூங்கா அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்ய அரசு சுற்றுசூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ ஆய்வு செய்தார்.தொடர்ந்து இனக்ஷ மாலை ஆய்வு முடிந்து திரும்பிய வனத்துறை அதிகாரியை மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மணிமுத்தாறு சுற்றுவட்டார பகுதியை சுமார் 100 -க்கும் மேற்பட்டவர் வனத்துறை அதிகாரி வாகனத்தை முற்றுகையிட்டு அவரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அப்போது ஒரு பெண்ணுக்கு திடீரென சுவாமி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அந்த மனுக்களில், வனப்பகுதியில் அமைந்துள்ள வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு பக்கத்தர்கள் பாதயாத்திரையாகவும், இருசக்கர வாகனத்தில் செல்லவும் வனத்துறையினர் அனுமதி வழங்க கோரி மனு அளித்தனர். மேலும் அவர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான கோவிலுக்கு மின்சாரம் வழங்குவது குறித்தும் மனு அளித்தனர்.தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், தற்போது பூங்கா அமைக்க மூன்று இடங்களை ஆய்வு செய்துள்ளதாக கூறினார். மேலும் வனப்பகுதியில் பூங்கா அமைந்தால் சாமானிய மக்கள் சென்று வரமுடியாது என எதிர்ப்பு தெரிவித்து மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி மற்றும் ஊர் பொதுமக்கள் எதிப்பு தெரிவித்து மனுவை அளித்தனர். இதனால் மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் சிறிது நேரம் பரபப்பு நிலவியது....