நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!
1035 views
Subscribe திருநெல்வேலி videosமணிமுத்தாறு அணையிலிருந்து விரைவில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட வில்லை எனில் ஏழு கிராம மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியல் செய்யப் போவதாக விவசாயி தெரிவித்தார்.திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பகுதிகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதி கார் பருவ சாகுபடிக்காக 40 அடி பெருங்கால் பாசன கால்வாய் திறந்து விடப்படும்.609.98 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம் இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தைச் சார்ந்த ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்குகல்லிடைக்குறிச்சி ஆகிய கிராமங்களில் சுமார் 2756.62 ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறும்.மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணையின் உச்சநீர் மட்டம் 118 அடி கொள்ளளவு ஆகும்.இந்நிலையில் பருவமழை சரியாக பெய்யாத காரணத்தினாலும், கோடை வெயிலில் தாக்கத்தினாலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து தற்போது மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 65 கன அடி கொள்ளளவு இருக்கின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் 1 தேதி தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடவில்லை எனில் ஏழு கிராம விவசாய மக்களும் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.