அதிகாரிகளின் அலட்சியத்தால் கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள் வேதனை!
1042 views
Subscribe திருநெல்வேலி videosதென்காசி மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் துறை, தீயணைப்பு துறை, வனத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தென்காசி மாவட்ட வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தைப் பொறுத்தவரை பெயரளவிற்கு மட்டுமே நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு தீர்வுகள் எட்டப்படாத அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டும் விதமாக ஆட்சியர் துரை.ரவிசந்திரன் முன்னிலையில் அதிகாரிகளும் செல்போன் பேசிக்கொண்டும், வாட்ஸ் அப் உபயோகித்துக் கொண்டும் இருந்தது கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்த மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. பொது மக்களின் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வுகள் கானும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.