தென்காசியில் கல்லூரி மாணவிக்கு கல்லூரி முதல்வர் பாலியல் தொல்லை:போலீஸ்போக்சோ வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
1231 views
Subscribe திருநெல்வேலி videosதென்காசி மாவட்ட நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது அன்சாரி. இவர் அதே பகுதியில் மாஸ் பாராமெடிக்கல் கல்லூரியை நடத்தி வருகிறார். இக்கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் கல்லூரி முதல்வரான முகமது அன்சாரி அதே கல்லூரியில் பயிலும் பாவூர்சத்திரத்தைச் சார்ந்த 17 வயது மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தைத் தொடர்ந்து அவர் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் அடிப்படையில் குற்றாலம் போலீசார் முகமது அன்சாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.மேலும் முகமது அன்சாரி என்பவர் கொரோனா காலகட்டத்தில் இருந்து தற்போது வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்வதற்கும், மக்கள் குறைதீர் கூட்டத்தில் கூட்ட நெரிசலை ஒழுங்கு படுத்தவும் மாணவிகளை பயன்படுத்தியதுடன், அவரும் செயல்பட்டது குறிப்பிடதக்கது.