அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா!
1039 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவஸ்தலங்களில் ஒன்றும் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றுமான நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு சித்திரை பிரம்மோஸ்தவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் உற்ச்வா் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது. திருத்தேர் 32 அடி உயரமும் 14 அடி அகலமும் 52 தூண்களும், 6 சக்கரங்களுடன் 5 அடுக்கு அதிர்ஷ்டானமும், 340 சிற்பங்களும், 4 குதிரைகளும் பொலிவுடன் உள்ளன. தோ்பவனிக்காக காலையில் மலர் அலங்காரத்தில் சுவாமி தேருக்கு எழுந்தருளினார். ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டதும் தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி மீண்டும் நிலையத்தை வந்த அடைந்தது. தேரை பக்தர்கள் கோவிந்தா கோபாலா நாராயணா கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்..விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்