நெல்லையில் சொத்து பிரச்சினை காரணமாக வீட்டின் காம்பவுண்ட் சுவரை சிசிடிவி காட்சி!
1339 views
Subscribe திருநெல்வேலி videosதிருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசித்து வருபவர் அருணாச்சலம் இவரது சகோதரர் தமிழரசன் இவர் காலமாகிவிட்ட நிலையில் அருணாசலத்திற்க்கும் தமிழரசனின் மகன் முத்துக்குமார் இடையே இட பிரச்சனை இருந்து வருகிறது.இந்நிலையில் அருணாசலம் வீட்டிற்க்கு சென்ற முத்துகுமார் மற்றும் தாளையூத்து சங்கர்நகர் பகுதியை சேர்ந்த செந்தூர் குமார் ஆகிய இரண்டு பேரும் அருணாசலம் வீட்டிற்க்கு பின்னாடி உள்ள தனது 10 சென்ட் இடத்திற்க்கு வழிபாதை கேட்டு பிரச்சனை செய்து பகல் நேரத்தில் தைரியமாக அருணாச்சலத்தின் வீட்டின் காம்பவுண்ட் சுவரை உடைத்து கேமராவை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விட்டு செல்கின்றனர். இது குறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் காவல்துறையினர் முத்துக்குமார் மற்றும் செந்தூர் குமாரை கைது செய்தனர் தற்போது அவர்கள் வீட்டை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது