திமுக நகராட்சி தலைவி உட்பட 4 பேர் மீது வழக்குபதிவுசெங்கோட்டை நகராட்சி திட்டக்குழு கூட்டத்தில் நடைபெற்ற சண்டை - திமுக நகராட்சி தலைவி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு.தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில், நகர திட்டக்குழு கூட்டமானது நேற்று நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தின் போது திமுகவை சேர்ந்த நகராட்சி தலைவியாக உள்ள ராமலட்சுமி மற்றும் அதிகாரிகள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும், அது குறித்து புகார் கூறினாலும் அவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் எனக்கூறி திட்டக்குழு கூட்டத்தில் கடும் அமலியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் நகராட்சி தலைவியாக உள்ள ராமலட்சுமி அறைக்குள் சென்று பிரச்சனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது, கவுன்சிலர்களுக்கும், நகராட்சி தலைவிக்கும் கடும் வாக்குவாதம் நிலவிய நிலையில், வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளானது. இந்த சம்பவம் நகராட்சி பகுதியில் பெரும்ப பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செங்கோட்டை போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில், நகராட்சி தலைவியான ராமலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், கவுன்சிலர்களான சுடர்ஒளி, முத்துப்பாண்டி, ராம்குமார் ஆகிய மூன்று பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல், கவுன்சிலர் சுடர்ஒளி கொடுத்த புகாரின் அடிப்படையில் நகராட்சி தலைவி ராமலட்சுமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.