உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தியபடி பேரணி
1030 views
Subscribe திருநெல்வேலி videosசெவிலியர்கள் தாயின் மறு வடிவம் என்று சொல்வதுண்டு அவர்கள் பொதுமக்களுக்கு ஆற்றி வரும் உன்னத சேவையை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் சர்வதேச செவிலியர் தினம் ஆண்டு தோறும் மே.12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் அவர் பிறந்த நாளான மே 12-ந்தேதி உலக செவிலியர் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதன்படி ஆண்டு தோறும் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று உலக செவிலியர் தினத்தையொட்டி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவமனையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பேரணி நடைபெற்றது பேரணியை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி கொடி அசைத்து துவக்கி வைத்தார் பேரணி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் சென்று மீண்டும் டீன் அலுவலகத்தில் நிறைவடைந்தது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி சென்றனர்