அரசு உதவி பெறும் பள்ளியின் அவலம்: சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் கழிவுநீர்
1040 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லை மாநகரம் பாளையங்கோட்டை அருகே கிறிஸ்துராஜா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இங்கு சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்நிலையில் இந்த பள்ளியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கடந்த சில நாட்களாக வெளியேறி வருகிறது இதனால் பள்ளி வளாகம் முழுவதும் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது குறிப்பாக மாணவர்களின் வகுப்பறை அமைந்துள்ள பகுதியில் கழிவுநீர் சூழ்ந்துள்ளது தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளி மூடப்பட்டிருந்தாலும் கூட இன்னும் ஓரிரு வாரங்களில் மீண்டும் பள்ளிகள் தொடங்க இருக்கிறது இதுபோன்று சூழ்நிலையில் பள்ளி வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது மேலும் இந்த கழிவுநீர் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் மாநகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது அதேபோல் இந்த கழிவு நீர் பிரச்சினை காரணமாக இப்பள்ளியில் நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வு ஒன்று ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது இது குறித்து சமூக ஆர்வலரும் திமுக மாணவர் அணி நிர்வாகியுமான உத்திரன் கூறும்போது, கடந்த 15 நாட்களாக இந்த கழிவுநீர் பிரச்சினை இங்கு உள்ளது மாநகராட்சியிடம் தெரிவித்த பிறகும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என பள்ளி நிர்வாகத்தினர் கூறுகின்றனர் வரும் 1ம் தேதி பள்ளி திறக்க இருப்பதால் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது எனவே மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்