நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆடிப்பூர திருவிழாவின் 4 ம் திருநாளில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம்
1039 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நான்காம் திருநாளான இன்று காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி காந்திமதி அம்பாள் மரக் கேடயத்தில் வெண்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மேளதாளம் முழங்க காந்திமதி அம்பாள் சுவாமி சன்னதிக்கு சென்று அங்கு சுவாமி இடம் பட்டு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனை தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்திற்கு மேலவாத்தியங்கள் இசைக்க எழுந்தருளிய காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நலுங்கும் அதனை தொடர்ந்து வளையல் அணிவிக்கும் உற்சவமும் நடைபெற்றது