வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் பால்குடம் காவடி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தினர்!
1014 views
Subscribe திருநெல்வேலி videosவள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நெல்லை மாவட்டத்தில் மிகபெரிய குடவரை கோவிலாகும். முருகனின் ஜென்ம நட்சத்திரமான விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது இதனையடுத்து இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுப்ரமணியருக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் பால்குடம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பால்குடம் தலையில் ஏந்தியும் பெண்கள் காவடியை தோளில் சுமந்தபடி "முருகனுக்கு அரோகரா" என்ற கோஷத்துடன் கோயிலை வலம் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்திக் கொண்டனர். பின்னர் பால்குட அபிஷேகம் நடைபெற்றது