தொடக்கப்பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அதனை தயார்படுத்தி வரும் ஆசிரியர்கள்!
1190 views
Subscribe திருநெல்வேலி videosதமிழக முழுவதும் நாளை முதல் தொடக்கப் பள்ளிகள் துவங்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது அதனை தயார் செய்யும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தேதி இருமுறை தள்ளி போன நிலையில் நாளை தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளை ஆசிரியர்கள் பள்ளியை தயார் படுத்தும் பணியினை தீவிர படுத்தியுள்ளனர் அவர்கள் பள்ளியில் அடிப்படை பணிகளான பள்ளியை சுத்தம் செய்ததோடு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய புத்தகங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் கணினிகளையும். அவர்கள் தயார் படுத்தி வருகின்றனர் . இது குறித்து லாலுகாபுரம் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் கலிஸ்டா கூறும்போது எங்கள் பள்ளியில்50க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர் . மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறோம் இந்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தங்கள் பள்ளியில் மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்இ இணையாக கணினி ஸ்மார்ட் கிளாஸ் என மிகுந்த தரத்தோடு உள்ளதாகவும் தெரிவித்தார்.