கீழ விழுந்து பல் உடைஞ்சுதா? என்ன நடந்தது? சூர்யா பேட்டி!ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்து பல் புடுங்கிய விவகாரத்தை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதால் தான் பிறழ் சாட்சியாக மாறினேன்; பாதிக்கப்பட்ட சூர்யா பரபரப்பு பேட்டிநெல்லை மாவட்டம் ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்தவர் சூர்யா தனியார் பள்ளி ஓட்டுனராக பணிபுரிந்து வந்த சூர்யாவை சிசிடிவி கேமராக்களை உடைத்த வழக்கில் கல்லிடைக்குறிச்சி போலீசார் கடந்த மாதம் கைது செய்துள்ளனர் அப்போது அம்பாசமுத்திரம் சரக காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் சூர்யாவின் பல்லை கட்டிங் பிளேயர் கொண்டு பிடுங்கி எடுத்ததாக சூர்யா பரபரப்பு புகார் அளித்தார் அதேபோல் மேலும் பாதிக்கப்பட்ட பலர் ஏஎஸ்பி மீது புகார் அளித்த நிலையில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் இது குறித்து விசாரணை மேற்கொண்டார் ஆனால் விசாரணையின் போது ஆஜரான வசூர்யா யாரும் தன் பல்லை புடுங்கவில்லை கீழே விழுந்து தான் பல் விழுந்ததாக பிறழ் சாட்சி அளித்தார் காவல்துறையினர் மிரட்டல் காரணமாகவே சூர்யா பிறழ்சாட்டியாக மாறியதாக கூறப்பட்டது இதற்கிடையில் பல் புடுங்கப்பட்ட விகாரத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நடத்தி வரும் உயர்மட்ட விசாரணையில் சூர்யாவினரய் தாத்தா பூதபாண்டியன் ஆஜராகி தனது பேரன் சூர்யாவை காணவில்லை என அதிர்ச்சி தகவல் தெரிவித்து இருந்தார் இந்த நிலையில் ஏற்கனவே கூறப்பட்டதை போன்று போலீசார் மிரட்டியல் தான் தான் பிறழ் சாட்சியாக மாறினேன் என்று சூர்யா தற்போது தெரிவித்துள்ளார் மேலும் சிறப்பு விசாரணை அதிகாரி அமுதாவிடம் வீடியோ கால் மூலமாக சூர்யா வாக்குமூலம் அளித்துள்ளார்நேற்று முன்தினம் சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி விசாரணை அதிகாரியிடம் தனது பேரனை காணவில்லை என்றும் காவல்துறை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் சுமார் 45 ஆயிரம் பணம் கொடுத்து காவல்துறைக்கு ஆதரவாக தகவல் சொல்ல சொல்லியதாக விசாரணை அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார்அதன் அடிப்படையில் விசாரணை அதிகாரி அமுதா வீடியோ கால் மூலமாக சூர்யாவிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றிருப்பதாகவும்கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் வைத்து தனது பல் புடுங்கப்பட்டது குறித்தும் வீடியோ கால் மூலமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததுள்ளார் அதேபோல் சிறப்பு விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் உத்தரவின் பேரில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியரிடம் சூர்யா நேரடியாக வீட்டில் வைத்தும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார் அதில் காவல்துறையால் தான் பாதிக்கப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்தன்மீது மேற்கொண்டு வழக்கு பதிவு செய்வதாக காவல்துறை மிரட்டியதாலேயே தான் பிறழ் சாட்சியாக மாறியதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார் இது குறித்து சூர்யா கூறும்போது போதையில் தெரியாமல் கேமராக்களை உடைத்து விட்டேன் அதற்காக என்னை காவல் நிலையம் அழைத்து சென்று ஏ எஸ் பி பல்வீர் புடுங்கி பல்லை புடுங்கி விட்டார் பின்னர் ஒரு மணி நேரத்தில் கேமராவுக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் மீண்டும் வந்து பல்லை உடைப்பேன் என்று ஹிந்தியில் தெரிவித்தார் பின்னர் எனது குடும்பத்தினர் பணத்தை செலுத்திய பிறகு என்னை வெளியே விட்டனர் பிரச்சனை வெளியே தெரிந்த பிறகு எனக்கு 50 ஆயிரம் பணத்தை கொடுத்து பல் பிடுங்கிய விவகாரத்தை வெளியே கூறக்கூடாது என்று மிரட்டினார்கள் ஆய்வாளர் ராஜேஸ்வரி என்னை விடுதியில் தங்க வைத்து சார் ஆட்சியர் விசாரணையின் போது கீழே விழுந்து பல் உடைந்ததாக கூறும் படி தெரிவித்தார். அதனால்தான் பிறழ் சாட்சியாக மாறினேன். என்று கூறினார் ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து காவல்துறையினர் பாதிக்கப்பட்ட நபர்களை மிரட்டுவதாக புகார் எழுந்து வரும் நிலையில் அதை நிரூபிக்கும் விதமாக பாதிக்கப்பட்ட சூர்யா பகிரங்கமாக போலீசார் மீது குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது