வெயில் தாக்கத்தால் கண்டபடி பேசுகிறார்: சபாநாயகரை சாடிய அதிமுக மாஜி எம்எல்ஏ!
1084 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கூடங்குளம் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் குடிநீர் கட்டுப்பாட்டை போக்கி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் வள்ளியூர் பேருந்து நிலையத்தின் கட்டிட வேலைகளை துரித படுத்த வேண்டும் வள்ளியூர் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் இயக்கப்படும் பேருந்துகளை வள்ளியூர் ஊருக்குள் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுகவின் சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும் அதிமுக வழக்கறிஞருமான இன்பதுரை நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார் அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் சபாநாயகர் தொகுதியான ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது பொதுமக்கள் சாலையில் இறங்கி போராடும் சூழல் உருவாகியுள்ளது தண்ணீர் மாபியாக்களால் கட்டுமான நிறுவனங்கள் கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றவைகளுக்கு தண்ணீர் விற்பனை செய்யப்படுவதே ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என தெரிவித்தார் வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தியபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது அதிகாரிகளுக்கு இது சோதனையான காலமாக உள்ளது அதிகாரிகள் தாக்கப்பட்டதாக புகார் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது தமிழக அரசுக்கு சி ஆர் பி எஸ் சி ஐ பி சி போன்ற சட்டங்களை எதுவும் தெரியாமல் ஆட்சி நடந்து வருகிறது கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் பீகார் ஒரிசா தெலுங்கு படங்களில் மட்டும் தான் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற காட்சிகள் வந்தது ஆனால் தற்போது தமிழகத்திலும் அந்த நிலை உருவாகியுள்ளது லண்டன் மாநகரில் தமிழக அமைச்சர்கள் திறந்து வைத்த பென்னிகுயிக் திருவுருவச் சிலை உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால் கருப்பு துணி கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது சட்டமன்றத்தில் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துரைத்து நீண்ட நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை லண்டன் மாநகரில் தமிழகத்தில் நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகியுள்ளது. தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை லண்டனில் உள்ள பென்னிகுயிக் உறவினர்கள் விரைவில் சந்தித்து பேச உள்ளனர் வயது முதிர்வு காரணமாகவும் வெயிலின் தாக்கம் காரணமாகவும் கண்டபடி சபாநாயகர் பேசி வருகிறார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ராதாபுரத்தில் திறப்பு விழா கொண்டாடுகின்றனர் என அவர் தெரிவித்தார்