நெல்லை நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா
1050 views
Subscribe திருநெல்வேலி videosதமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா வருகிற ஜூன் மாதம் தொடங்கி ஜூலை மாதம் 2 ம் தேதி ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட திருத்தேர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது . நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழா 48 நாட்கள் நடைபெறும் .இந்த விழாவின் துவக்கமாக முகூர்த்த கால் நடும் விழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த விழாவிற்காக அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து அப்பர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது.பின்னர் கோவில் வளாகத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது.அதனை தொடர்ந்து பந்தல் கால் கோவிலில் இருந்து சுவாமி சன்னதி தெருவிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது பின்னர் கோவில் யானை காந்திமதி திருவிழா முகூர்த்தகாலுக்கு பிலிரி மரியாதை செய்ய பந்தல் காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து கோவில் வாசல் மண்டபத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த விழாவை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் 48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வான முகூர்த்த கால் நாட்டப்பட்டதை தொடர்ந்து தொடர்ந்து தேருக்கான பணிகளுக்கு நாள் செய்யப்படும் பின்னர் ஊர் காவல் தெய்வமாக விளங்கும் பிட்டாபுரத்தி அம்மன் திருவிழா 10 நாட்கள் நடைபெறும் அதனை தொடர்ந்து நெல்லையப்பர் கோவிலில் 10 நாட்கள் விநாயகர் திருவிழாவும் அதன் பின்னர் சந்திரசேகரர் திருவிழா,நால்வர் திருவிழா நடைபெறுகிறது.தொடர்ந்து ஜூன் மாதம் 24 ம் தேதி நெல்லையப்பருக்கான ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட திருப்தியர் ஓடும் தேரோட்டம் ஜூலை இரண்டாம் தேதி நடைபெறுகிறது.