உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
1076 views
Subscribe திருநெல்வேலி videosஇந்திய உயர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்கின்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கீழமை நீதிமன்றங்களில் மாநில மொழிகள் வழக்காடு மொழியாக இருக்கின்றன ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் உயர் நீதிமன்றங்களிலும் அந்தந்த மாநில மொழிகள் அலுவல் மொழியாக்கப்படும் என்ற கோரிக்கை வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நெல்லையில் அகில இந்திய வழக்கறிஞர் சங்க நெல்லை மாவட்ட குழு சார்பில் நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன்பு மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உயர்நீதிமன்றங்களிலும் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்