நெல்லை மாவட்டம் களக்காடு அருகே ஒரு மாதத்திற்கு பிறகு வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது கரடி!
1057 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லை மாவட்டம் களக்காடு வனப்பகுதியில் இருந்து வெளிவந்த கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் பெருமாள்குளம் அருகே உள்ள கோயில் பொத்தைகளில் தஞ்சமடைந்து உணவு மற்றும் குடிநீருக்காக கிராமத்திற்குள் புகுந்து வந்ததுகடந்த 2ம் தேதி அதிகாலை அங்குள்ள இசக்கியம்மன் கோவிலில் உலா கரடி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை அடுத்து ஊருக்குள் சுற்றி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து களக்காடு வனத்துறையினர் கரடி நடமாட்டம் காணப்படும் பெருமாள்குளத்தில் கோயிலின் அருகே கரடியை உயிருடன் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. கூண்டுக்குள் கரடி விரும்பு உண்ணும், அண்ணாசி பழங்கள் வைத்து வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வந்த நிலையில் இன்று காலை வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி சிக்கியது இதனை அடுத்து மீண்டும் அதனை வனத்துறையினர் காட்டில் விட முடிவு செய்துள்ளனர் இதனால் அப்பகுதி மக்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் கடந்த ஒரு மாதமாக கரடி பயத்தால் பொதுமக்கள் மிகவும் பீதியில் காணப்பட்ட நிலையில் கரடி பிடிபட்டதால் என்று பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.