நெல்லையில் 12 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த நியாயவிலைக் கடை மீண்டும் திறக்கப்பட்டது!
1164 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லை சந்திப்பு பகுதியில் மாநகராட்சி மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியான செல்வி அம்மன் கோவில் தெருவில் நியாய விலை கடை ஒன்று அமைந்துள்ளது இங்கு நான் இருக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் அட்டை மூலம் பொருட்கள் வாங்கி வந்துள்ளனர் பல்வேறு நிர்வாக காரணங்களால் கடந்த 12 வருடங்களாக இந்த கடை மூடப்பட்டு செயல்படாமல் இருந்து வந்தது ,இதனை தொடர்ந்து இப்பகுதி மக்கள் அங்கிருந்து வெகு தூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர் இப்பகுதியில் உள்ள கடையை மீண்டும் திறக்க வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார்கள் அழைக்கப்பட்டு தொடர் போராட்டமும் நடத்தப்பட்டது இந்த நிலையில் இந்த கடை அடைக்கப்பட்டது தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை பல்வேறு விசாரணைகள் நடத்தி மீண்டும் திறக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மீண்டும் புது பொலிவுடன் கடை திறக்கப்பட்டது இதனை அப்பகுதி ஊர் நாட்டாமை வெள்ளேரி ஐயப்பன் திறந்து வைத்தார் இதனை அடுத்து அப்பகுதி மக்கள் மன மகிழ்ச்சியுடன் ரேஷன் பொருட்களை வாங்கிச் சென்றனர் 12 ஆண்டுகளாக நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக அப்பகுதியில் கடை திறக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது