உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் பேரணி
1164 views
Subscribe தூத்துக்குடி videos1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் அவர் பிறந்த நாளான மே 12-ம் தேதி உலக செவிலியர் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதன்படி ஆண்டுதோறும் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று உலக செவிலியர் தினத்தையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் பேரணி நடைபெற்றது. பேரணியை மருத்துவக் கல்லூரி டீன் சிவகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார் பேரணி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் சென்று மீண்டும் டீன் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு செவிலியர் உடன் இணைந்து உலக செவிலியர் தினத்தை நினைவு கூறும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் இதைத் தொடர்ந்து 30- ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றிய மூன்று செவிலியர்களுக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் செவிலியர் சங்க தலைவர் ஹெப்சி ஜோதிபாய், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி உள்ளிட்ட ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.