வீரபொம்மு அம்மாள் திருக்கோயில் வைகாசி மாத ஆண்டு கொடைவிழா!
1049 views
Subscribe தூத்துக்குடி videosகோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ வீரஅழகம்மாள், வீரபொம்மு அம்மாள் திருக்கோயில் வைகாசி மாத 24ம் ஆண்டு கொடைவிழா- முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கினார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கே.வள்ளிநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரஅழகம்மாள், வீரபொம்மு அம்மாள் திருக்கோயில் வைகாசி மாத 24ம் ஆண்டு கொடைவிழா முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கி பாராட்டி பேசினார். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியாரம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத கொடை விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தில் கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கருப்பசாமி,நகர மன்ற உறுப்பினர் கவியரசன், வள்ளிநாயகபுரம் கிளை செயலாளர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் கதர் ஸ்டோர்ஸ் ராமசுப்பு,அழகர்சாமி, அம்பிகா பாலு, காமராஜ்,கெங்காராஜ்,வெங்கடேஷ்,முருகன், பழனி குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.