நிலத்தடி விற்பனை : ஆழ்துளை கிணறுகளுக்கு சீல்
1060 views
Subscribe தூத்துக்குடி videosதூத்துக்குடி முள்ளக்காடு, கோரம்பள்ளம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம் கோரம்பள்ளம்-II முள்ளக்காடு-1 கிராமத்தில் நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்வதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட புகார் மனு தொடர்பாக,உதவி நிலவியலாளர் மற்றும் வருவாய் துறை அலுவலர் அன்று களஆய்வு மேற்கொண்டபோது 6 இடங்களில் அரசு அனுமதியின்றி நிலத்தடி எடுத்து விற்பனை செய்வது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தபட்ட ஆழ்துளை கிணறுகளை மூட மாவட்ட அளவிலான நிலநீர் தடுப்பு கண்காணிப்பு குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து நீர் வளத்துறை அதிகாரிகள் கோரம்பள்ளம், முள்ளக்காடு பகுதிகளில் இருந்த 6 ஆழ்துளைகிணறுகளை மூடி சீல் வைத்தனர்.