தூத்துக்குடி கிராம நிலப் பிரச்சினை இரு தரப்பு மனு!
1035 views
Subscribe தூத்துக்குடி videosதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம், சுப்பம்மாள்புரம், சில்லாங்குளம், தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: சுப்பம்மாள்புரம் கிராமத்தில் கருப்பசாமி கோவில் வடக்கு செல்லியம்மன் கோவில் ஆகியன கண்மாயில் அமைந்துள்ளது. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த நாங்கள் கருப்பசாமி கோவிலில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அதே போல் வடக்கு செல்வி அம்மன் கோவிலில் நாங்கள் மற்றும் மேல்சாதியினரும் பழங்காலம் தொட்டு வணங்கி வந்தோம். கடந்த 6 மாதத்திற்கு முன்பு வரை செல்லியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு வந்த மேல் சாதியினர் ஊரில் உள்ள தென்மேற்குப் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் பெருமாள் கோவில் அருகில் அமைந்துள்ள, தற்சமயம் சில்லாங்குளம் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் நான்கில் மூன்று பங்கு நிலத்தினை ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் வடக்கு வாய் செல்லியம்மன் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து புதிதாக கோவில் அமைத்தது மட்டுமன்றி டைமண்ட் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். வடபுறம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீண்டும் ஆக்கிரமித்து கையகப்படுத்த பார்க்கிறார்கள். பெருமாள் கோவிலில் நாங்கள் கீழ் சாதியினர் என்பதால் அந்த கோவிலில் சாமி கும்பிட எங்களை அனுமதிப்பதில்லை. நாங்கள் குடும்பத்தோடு பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றால் எங்களை விரட்டி விடுவார்கள். 4.6.2023 ஆம் தேதி அன்று அரசு புறம்போக்கு நிலத்தில் நாங்கள் பிள்ளையார் கோவில் கட்ட வாஸ்து செய்து சாமி கும்பிடும் சமயம் காவல்துறையின் மூலம் எங்களை தடுத்து தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இங்கு இடம் இல்லை என எங்களை துரத்துகின்றனர். மேலும் விஏஓ ஸ்தலத்தில் ஆஜரான சமயம் இதுகுறித்து நாங்கள் முறையிட்டபோது இந்த இடமும் அரசு புறம்போக்கு தான் என தெரியப்படுத்தினார். அதேசமயம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தொடர்பு கொண்ட போது முறையாக அனுமதி பெற்று நீங்கள் வாஸ்துவை செய்திருக்க வேண்டும் என கூறினார்.மேல் சாதியினருக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் புதிதாக கோவில் கட்ட எவ்வளவு விரைவில் அனுமதி வழங்கப் பட்டதோ அதனடிப்படையிலேயே தாழ்த்தப்பட்ட சாதியினராகிய எங்களுக்கும் அரசு புறம்போக்கில் கோவில் கட்ட இடம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மற்றொரு தரப்பினர் சில்லங்குளம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தினை மீட்டு தர கோரி : ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.தூத்துக்குடி மாவட்டம் சில்லங்குளம் கிராமத்தில் வசித்து வரும் சுப்புராமன் மற்றும் வேலுச்சாமி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தனர்.