சுனாமி 18 வது ஆண்டு நினைவு தினம் - மீனவர்கள் மௌன அஞ்சலி
1005 views
Subscribe தூத்துக்குடி videosகடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உலகம் முழுவதும் சுனாமி பேரலை ஏற்பட்டது இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிர் மற்றும் உடைமைகளை இழந்தனர்சுனாமி பேரலை தாக்கி 18 ஆண்டுகள் முடிந்ததை முன்னிட்டு சுனாமியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடி திரேஸ் புரம் கடற்கரையில் நாட்டுப்படகு மீனவர்கள் மீண்டும் சுனாமி பேரலை வரக்கூடாது என்றும் சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தியதுடன் கடல் மாதாவிற்கு மலர் மற்றும் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை