தாம்பூல தட்டில் வைத்து மனு கொடுக்கும் நூதன போராட்டம்
1033 views
Subscribe தூத்துக்குடி videosதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நகர் பகுதியில் அனைத்து குடியிருப்புகளுக்கும் பட்டா வழங்க கோரியும் சர்வே நம்பர் 513 ஆவண பதிவு மேற்கொள்வது தொடர்பாக வட்டாட்சியர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்யக் கோரியும் தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் தாம்பூல தட்டில் வைத்து மனு கொடுக்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.. இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனுவை அளித்தனர். மனுவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதை எடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.