மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்;பாஜக எம்பியை கைது செய்ய போராட்டம்!
1028 views
Subscribe தூத்துக்குடி videosஇந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜகவை சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சிங் எங்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்தார்; அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறி கடந்த ஜனவரி மாதம் முதல் சாக்சி மாலிக், தினேஷ் போகத், சங்கீதா போகத், பஜ்ரங் புனியா உட்பட பல மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒலிம்பிக் போட்டி, உலக மல்யுத்தம் சாம்பியன்சிப் போட்டி உள்ளிட்டவற்றில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளாவர்.டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 35 நாட்களுக்கும் மேலாக போராடி வந்த இவர்களை, டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக கடந்த ஞாயிறன்று வெளியேற்றியது.இதனை கண்டிக்கும் விதமாக, தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள தூத்துக்குடி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமாய் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்..