தூத்துக்குடியில் 20 ஆண்டுகளாக சாலை அமைக்காத தெருக்கள்: ஆட்சியரிடம் பாஜக முறையீடு!!
1041 views
Subscribe தூத்துக்குடி videosதூத்துக்குடியில் 20 ஆண்டுகளாக சாலை அமைக்காத பகுதிகளில் சாலை அமைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்து பாரதிய ஜனதா கட்சி தெற்கு மண்டல் தலைவர் மாதவன் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: தூத்துக்குடி மாநகராட்சி 53வது வார்டு ஆனந்த நகர் மற்றும் முத்தாரம்மன் கோவில் தெரு பகுதியில் 20 வருடங்களுக்கு மேலாகியும் சாலை அமைக்காமல் இருப்பதால் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.இதற்காக பலமுறை கோரிக்கையாக கூறியும் சேரும் சகதியுமாக இருந்த இடத்தில் அந்த பகுதி மக்கள் சார்பாக எதிர்பை தெரிவிக்கும் விதமாக வாழைமரம் நட்டும் போராட்டம் நடத்தியும் இன்று வரை சாலை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் அந்தப் பகுதி மக்கள் மிகவும் வேதனையில் உள்ளனர். ஆதலால் ஆனந்த நகர், கீழ தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு போன்ற பகுதிகளில் உடனடியாக சாலை மற்றும் கால்வாய் அமைத்து மக்களின் வேதனையை போக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.