பேருந்தில் கொண்டு வந்த 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது!
1055 views
Subscribe தூத்துக்குடி videosபேருந்து மூலம் திருச்செந்தூருக்கு கஞ்சா கொண்டுவரப்படுவதாக திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி தாலுகா போலீசார் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் பேருந்து நிலையம் வந்த தனியார் பேருந்தில் இருந்து இரண்டு வாலிபர்கள் இறங்கினர். அதில் ஒருவர் கையில் அட்டைப்பெட்டி வைத்திருந்தார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அந்த இரண்டு வாலிபர்களிடம் விசாரித்த போது தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து அட்டைபெட்டியை சோதனை செய்தபோது அதில் கஞ்சாய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வாலிபர்களை தாலுகா போலீசார் கைது விசாரணை நடத்தியதில், தேனி மாவட்டம் சோலை தேவன் பட்டி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் அபிஷ் (எ) மருது(22). தென்காசி மாவட்டம் சிவகிரி, நேதாஜி ரோடு தெருவை சேர்ந்த லிங்கம் மகன் தங்க மாரியப்பன் (22).என தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து. சிறையில் அடைத்தனர்.