வாள்கள் மற்றும் போதை பொருள் வைத்திருந்தவர் கைது
1040 views
Subscribe தூத்துக்குடி videosதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பிரேம் ஆனந்த் தலைமையில் தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் இன்று (23.05.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவநாயர் காலனியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த அண்டோ (47) என்பதும் அவர் மறைத்து வைத்திருந்த சாக்கு பையில் 5 வாள்கள் மற்றும் போதை பொருள் போன்ற கிறிஸ்டல் கல் நிற பவுடரை வைத்திருந்ததும் தெரியவந்தது.இதனையடுத்து தனிப்படை போலீசார் அன்டோவை கைது செய்து அவரிடமிருந்த 5 வாள்கள் மற்றும் 615 கிராம் போதை பொருள் போன்ற கிரிஸ்டல் கல் நிற பவுடரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.