ஓபிஎஸ் - டிடிவி சந்திப்பு; இபிஎஸ்க்கு பயமா? கடம்பூர் ராஜூ பேட்டி!ஒ.பி.எஸ் டி.டி.வி தினகரன் சந்திப்பைக் கண்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி..தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடை சேவல் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் வாறு கால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் அப்போது மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிச்சாமி,ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன்,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன்,ஒன்றிய கவுன்சிலர் கிருபாகரன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, அதிமுக நிர்வாகிகள் பழனிக்குமார்,முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.