செய்துங்கநல்லூர் அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா!
1046 views
Subscribe தூத்துக்குடி videosதூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகில் அமைந்துள்ளது அய்யனார்குளம்பட்டி. இந்த ஊரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது இதற்காக நேற்று மாலை முதல் இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று காலை மூன்றாம் காலையாக சாலை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், கோபூஜை, நவகிரக ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து குடம் புறப்பாடு நடந்தது. பின்னர் கோவில் மேல் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 21 வகையிலான அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.